புதன், 30 ஜூன், 2010

உண்மைகளும் ஆதாரங்களும்.. அனைவருக்காகவும்...

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 25


இங்கே வர்ணமாக்கப் பட்டிருக்கின்ற பகுதிகளை சற்று கவனிக்கவும்.

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -24
 இன பிரிவினை கருத்துக்களை அள்ளி வீசக்கூடிய பேச்சாளர்கள் இந்தியாவிலிருந்து வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தமிழ் ஆராய்ச்சிக்காக நடாத்தப்பட வேண்டிய இம்மாநாடு பிரிவினைக்கு தூபமிடுவதாக அமைந்துவிட கூடாது என்பதில் அரசு கவனமாயிருப்பது இயல்பே.

இதன்காரணமாக தமிழ் நாட்டிலிருந்து வருகை தரவிருந்த உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் ஜனார்த்தனன் போன்ற பேச்சாளர்களுக்கு இலங்கையரசு வீஸா தரமறுத்திருந்தது. அவரை தனிதமிழீழ கோரிக்கையை தூண்டிவிட கூடிய உணர்ச்சிகரமான பேச்சாளராக அரசு கருதியதே அதற்கு காரணம். ஆனால் இந்த வீஸா மறுப்பும், மாநாட்டுக்கான தடைமுயற்சிகளும் அல்பிரட் துரையப்பாவின் தூண்டுதலின் பெயரிலேயே நடைபெறுவதாக அமிர்தலிங்கம் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த துரையப்பாவோ யாழ்பாண மேயர் எனும் வகையில் இந்த மாநாட்டுக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்ய தான் தயாராகயிருப்பதாகவும் அறிக்கைவிட்டார். ஆனால் நீதிமன்றங்களில் குதர்க்கம் பேசி தேர்ச்சி பெற்ற அமிர்தலிங்கம் “யாரின் உதவியுமின்றி தன்னால் தனித்து மாநாட்டை நடாத்த முடியும் என மறுப்பறிக்கை விட்டார்.

அதற்கு பதிலிறுத்த துரையப்பா தனது உதவிகள் ஏற்றுகொள்ளபடாவிட்டாலும் தான் இதற்கு தடையாக இருக்க போவதில்லை என சொன்னார். “யார் தடைசெய்தாலும் மாநாடு நடந்தே தீரும்” என்று வேண்டாத விவாதங்களில் ஈடுபட்டார் அமிர்தலிங்கம். இதனுடாக மாநாட்டினை ஒட்டி மிக மோசமானதொரு பதட்ட சூழலினை தோற்றுவிக்க அவரே காரணமாயிருந்தார்.

இப்படியாக அரசாங்கத்தினது பல முட்டுக்கட்டைகளையும் பாரிய ஆபத்துக்களையும் வென்று தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படபோகிறது என்ற ஒரு மாய தோற்றத்தை வடக்கு, கிழக்கு மக்களிடம் ஏற்படுத்துவதில் அமிர்தலிங்கம் வெற்றி கண்டார்.

இறுதியாக இறைமையுள்ள ஒரு தேசமான இலங்கையரசின் சட்டதிட்டங்களை மீறி கள்ள தோணியில் ஜனார்தனன் போன்ற இந்திய பேச்சாளர்களை யாழ்பாணம் கொண்டுவந்து சேர்ப்பதில் அமிர்தலிங்கம் இறங்கினார்.

அதுமட்டுமன்றி உதவி அமைச்சர் சோமவீர சந்திரசிறீ, யாழ் மேயர் அல்பிரட்துரையப்பா போன்றோர் மீதான கொலை முயற்சிகளில் ஈடுபட்டமைக்காக இலங்கை பொலிசாரினால் தேடப்பட்டு வந்த சிவகுமாரன் போன்ற தமிழ் மாணவர் பேரவை இளைஞர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவை பட்டாளமும் இம்மாநாட்டில் முக்கியஸ்தர்களாக உலாவந்தனர்.

உண்மையில் தமிழ் ஆராய்ச்சி மாநாடுதான் நடத்தபட வேண்டுமாக இருந்திருந்திருந்தால் இவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இவைமட்டுமல்ல குழப்பங்களை ஏற்படுத்தும் வண்ணம் இன்னும் பல தேவையற்ற பொறுப்புகளை அமிர்தலிங்கம் போன்றோர் இந்த இளைஞர் பட்டாளத்திடம் வழங்கியிருநதனர்.

அதாவது விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த ஜனார்த்தனன் அவர்களை இலங்கை பொலிசார் கைதுசெய்யாமல் பாதுகாக்கும் பொறுப்பை பொலிசாரால் தேடப்பட்ட சிவகுமாரன் குழுவினரிடமே வழங்கியிருந்தமை நிலைமைகளை மேலும் சிக்கலாக்கியது.

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் எனும் நூலினை எழுதிய புஸ்பராசா அவர்கள் தனது நூலில் 96 ஆம் பக்கத்தில் இந்தவிடயங்களை ஒப்புக்கொண்டுள்ளார். “மாநாட்டுக்கு உலகத் தமிழ் இளைஞர் பேரவையின் தலைவர் ஜனார்த்தனன் வந்த செய்தியை அமிர்தலிங்கம் மூலம் அறிந்துகொண்டேன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றில் வைத்து ஜனார்தனனை சந்தித்தேன். ஜனார்த்தனனது பாதுகாப்பு ஏற்பாடுகளை சிவகுமாரனே செய்தார்” என்கிறார் அவர். இவையெல்லாம் தமிழை ஆராட்சி செய்வதற்கோ அன்றி தமிழுக்கு தொண்டு செய்வதற்தோ தமிழை வளர்ப்பதற்கோ செய்யப்பட்டதல்ல. மாறாக எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு அமிர்தலிங்கத்தின் செயற்பாடுகள் பங்களித்தன.

வரலாற்றின் மனிதன் என்கின்ற அ.அமிர்தலிங்கம் அவர்களது பவளவிழா மலரில் இச்சம்பவம் குறித்து ஜனார்த்தனன் பின்வருமாறு விபரிக்கின்றார்.

“செய்தித்தாள்களில் நான் உரையாற்றுவேன் என அறிவிப்பு. காலை ஊர்வலத்தை தொடங்கிவைத்து பேசியபோதே என்னை கைது செய்ய பொலிசார் முயற்சிசெய்ய, அவரிடம் அமரர் நவரத்தினம் பேச்சுக்கொடுத்து இடைமறிக்க, தலைமறைவானேன். மாலை வீரசிங்கம் மண்டபத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்துவிட்டதால் வெளியே அமைக்கப்பட்ட திடீர் மேடையை அடைந்தேன். காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘உம்மைக் கைது செய்து கொழும்பு நாலாவது மாடிக்கு அழைத்துசெல்லும் உத்தரவிது.’ எனக்காட்ட பேசிவிட்டுத்தான் வருவேன், பேசாது இங்கிருந்து போக தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என நான் மறுக்க வேறுவளியின்றி கூட்டத்தைக் கலைத்து அங்கேயோர் ‘ஜாலியன் வாலாபாக்’ நடத்த காவல்துறையினர் முடிவுசெயது அகன்றனர். அலையைக் கிழித்துவரும் கலம்போல் அமிர்வந்தார்.
கரகொலி விண்ணைப்பிளக்க கையில் இருந்த மாலையை எனக்கு அணிவிக்க அதை அவருக்கு நான் திரும்ப மாலையிட அந்த மணமேடை – பின்னர் 12 உயிர்களை தியாகவடிவில் காணும் அவலம் ஏற்பட்டது.”

இந்த வாக்குமூலங்கள் ஊடாக நாட்டின் சட்டத்தை காக்கும் கடமையில் ஈடுபட்ட பொலிசார் ஆத்திரமூட்டப்பட்டு சிவகுமாரன், ஜனார்த்தனன் போன்றோரை கைதுசெய்யும் முயற்சியில் வான்நோக்கி சுடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

 இதனை “அமிர்தலிங்கம் சகாப்தம்” எனும் நூலை எழுதிய கதிர் பாலசுந்தரம் அவர்கள் பின்வருமாறு விபரிக்கின்றார்.

“1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆராட்சிமாநாடு நடந்தது. உலகமெங்கும் இருந்து அறிஞர்கள் வந்திருந்தனர். மக்கள் வெள்ளம் அலைபுரண்டது. யாரோ ஒரு இந்தியர் பேசப்பேவதாக பொய்க்கதை பரவியது. திடீரென வந்த பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். குண்டாம்தடிகளால் மக்களை அடித்தனா. ரைபிள்களால் சுட்டனர். மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து 9 பேர் பலியாகினார்கள்.”

நடந்த உண்மைகளை இதற்குமேல் இன்றைய பரம்பரை புரிந்து கொள்ள வேண்டும். இவையனைத்தும் தாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக மகாநாடு நடந்ததாகவே தமிழர் விடுதலைக் கூட்டணி கணக்குப் போட்டிருக்க வேண்டும். ஏனெனில் 10-01-74 இல் நடந்த இந்த 9 பேரினுடைய இறப்பும் சிங்களப் பேரினவாத அரசின் தமிழ் படுகொலை என்று பிரச்சாரப் படுத்தி தேர்தலில் களம்மிறங்க அமிர்தலிங்கத்துக்கும் அவர் சார்ந்த கூட்டணியினருக்கும் நல்ல வாய்ப்பபை ஏற்படுத்திக்கொடுத்தது.

கிழக்கு மாகாணத்தில் இருந்து இந்த தமிழ் ஆராட்சி மாநாட்டுக்காக தமிழர்விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட வாகன சேவையினூடு யாழ்ப்பாணம் சென்ற கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் யாருமே இந்த படுகொலையின் பின்னணியில் இருந்த சூட்சுமங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அமிர்தலிங்கத்துக்கும் அல்பிரட் துரையப்பாவுக்கும் இடையே இருந்த அதிகாரப் போட்டி சண்டைகள் குறித்து அவர்கள் ஏதும் அறிந்திருக்கவில்லை. இந்த சூழ்நிலையிலையே தம் கண்முன்னே நடைபெற்றிருந்த கொலைகளை திட்டமிட்ட சிங்களப் பொலிசாரின் படுகொலையே என நம்பினர். வெடிச்சத்தங்களும் மகாநாட்டில் ஏற்பட்ட குழப்பமும் கொலை செய்யப்பட்ட 9 உடல்கள் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி இறக்கப்பட்டமையும் தம் கண்ணெதிரே நடந்தேறியமையால் இப்படுகொலையானது சிங்கள அரசின் திட்டமிட்ட படுகொலையென்றே அவர்களை நம்பவைத்தது.

தப்பிப் பிழைத்து கிழக்கு மாகாணத்துக்கு வந்த சேர்ந்த அவர்கள் தாம் கொண்டுவந்த செய்திகளை அங்கே பரப்பினர். “கண்ணால் கண்டதும் பொய்” என்பதை அவ்வேளை கிழக்கிலங்கை மக்களிடத்தில் காலம் ஒருதரம் நிரூபணமாக்கிச் சென்றது.

இந்த தமிழாராட்சி மாநாட்டு அனர்த்தங்களுக்கு பின்பு நடந்த முக்கியமாதொரு சம்பவம் வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு வன்முறை மீதான விருப்பத்தை மென்மேலும் அதிகரிக்க ஏதுவாக்கிற்று பொன் சிவகுமாரன் யாழ்பாணத்தில் நடந்த இருவேறு குண்டுத்தாக்குதல் கொலை முயற்சிகளுக்காக ஏற்கனவே தேடப்பட்டு வந்தவர் என்பதை மேலே கண்டோம்.

1974 ஆம் ஆண்டு ஆனி மாதம் 5 ஆம் திகதி கோப்பாய் வங்கியயொன்றில் பொதுமக்களின் நகைகளை கொள்ளையிட முயற்சிக்கையில் வங்கி ஊழியர்களாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் பொலிசாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டார். அக்கைதின் போது “சயனைட்” எனும் விசமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தற்கொலை தமிழர்விடுதலைக் கூட்டணியினரால் பரபரப்பாக்கப்பட்டு வீரச்சாவாக வர்ணிக்கப்பட்டது. அதனூடாக ஒருவித கீரோயிச மனப்பாங்கின் மீதான பற்றுதலை இளைஞர்களுக்கு ஊட்டிவிடுவதில் கூட்டணிப் பேச்சாளர்கள் வெற்றியடைந்தனர்.

அஞ்சலிக் கூட்டங்களின் போது பொதுமக்களையும் மாணவர்களையும் அணிதிரட்டிய த.வி.கூட்டணியினரும் அவர்களது கிளையினரான தமிழ் இளைஞர் பேரவையினரும் இப்படி ஆயிரம் ஆயிரம் சிவகுமாரன்கள் உருவாக வேண்டும் என்று வன்முறைக்கு வித்திட்டனர்.

மறுபுறம் இதுபோன்ற பல நிகழ்வுகளில் முக்கிய பேச்சாளராகிய அமிர்தலிங்கம் தன்னைத்தானே தமிழீழத்தின் தளபதியாக வரித்துக்கொண்டதன் ஊடாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை தனக்கானதாக மென்மேலும் உறுதி செய்து கொண்டார்.

தொடரும்…

read more...

நாலாவது உலகத் தமிழாராட்சி மாநாட்டுப் படுகொலை.

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -24

நண்பர் ஒருவரின்  பின்னூட்டம் இதோ...

////Sabarinathan Arthanari on 29 ஜூன், 2010 12:21 pm சொன்னது…

நண்பரே நான் தமிழக தமிழன். இலங்கை நிலை குறித்து இலங்கை நண்பர்கள் சொல்வதை வைத்தே அறிந்து கொள்ள இயலும்.
//1974 இல் தமிழாராட்சி மாநாட்டில் இனவெறி பித்து தலைக்கேறிய சிவகுமாரன் தலைமையிலான இளைஞர் குழாமினால் திட்டமிடப்பட்டபடியே 9 உயிர்களை மின்சாரத்துக்கு பலிகொடுத்தனர்//
எனும் கருத்து கீழே உள்ள நண்பரின் கருத்துக்கு மாற்றாக அமைந்துள்ளது.
http://santhyilnaam.blogspot.com/2010/06/blog-post_28.html
விளக்க இயலுமா ?//

அவருக்குரிய விளக்கங்கள்..

“நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை” என்பது இலங்கை தமிழர்களது அரசியல் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும். மிகவும் பிரபல்யமானதொரு மாநாட்டை யாழ்பாணத்தில் நடாத்தவிடாமல் சிறிமா பண்டாரநாயக்கா தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு முட்டுக்கட்டைபோட்டது. “பொலிசாரை அனுப்பி மாநாட்டில் கலந்துகொண்ட 9 அப்பாவி தமிழர்களை காட்டுமிராண்டித்தனமாக சுட்டுகொன்றது” என்பதே வரலாறாக ஒவ்வொரு தமிழர் மனதிலும் இன்றுவரை உலாவரும் செய்தி ஆகும்.

இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள்தான் இன்றுவரை தமிழர் தரப்பு போராட்டங்களுக்கு நியாயம் சேர்த்து வருபவையாக இருக்கின்றன. ஆனால் உண்மை சம்பங்களாக விபரிக்கப்படுகின்ற குரூரங்களின் வரலாற்று சூழலையும், இச்சம்பவங்களின் பின்னணியில் மறைக்கப்பட்டிருக்கின்ற தகவல்களையும் தேடி ஆராய்கின்றபோது மேலும் பலவிதமான அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவரகாத்திருக்கின்றன.

அது மட்டுமன்றி இது போன்ற இழப்புகளை தவிர்த்திருக்கக்கூடிய வாய்ப்புகளை தமிழ் தலைவர்கள் திட்டமிட்டே கருத்தில் எடுக்காதிருக்கின்றனர். சிலவேளைகளில் இன்னுமொருபடி மேலேபோய் தமிழ் தலைமைகளே இதுபோன்ற குரூரமான வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

1970 ஆண்டு தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து இடதுசாரிகள் கூட்டணி அரசாங்கம் அமைத்திருந்தனர். தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான மக்கள் நல திட்டங்கள் பல நாடெங்கும் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் உப உணவுப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் அதிக கவனமெடுத்து செயற்பட்டது.

வெங்காயம், மிளகாய்…போன்ற பயிரிடல்களில் ஈடுபட்ட ஏழை விவசாயிகள் பலர் இந்த சிறிமா ஆட்சியில்தான் கூடிய இலாபம் சம்பாதித்து சமூகத்தில் முன்னணிக்கு வரும் அரியவாய்ப்புகளை பெற்றுகொண்டனர். அதேபோன்று உழைப்பாளர்கள் நலன்சார்ந்த கூட்டுறவு சங்கங்கள், தொழிற்சங்கங்கள்…… போன்ற அமைப்புகளும் இந்த காலத்தில்தான் அதிக வளர்ச்சி கண்டன. அதேபோன்று அந்தகாலகட்டத்தில் யாழ்மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா கூட சிறிலங்கா சுதந்திர கட்சி சார்ந்தவராக இருந்தார்.

இதன்காரணமாக யாழ் மாவட்டத்தினை மேலும் பலவழிகளிலும் அபிவிருத்தி செய்ய அவருக்கு அரசாங்கத்தின் பூரண ஆதரவு கிட்டியது. இதனை மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் அந்த காலத்தில் (1970-1977) பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இராஜன் செல்வநாயகம் அவர்களின் அபிவிருத்தி திட்டங்களுடன் ஒப்பிடலாம்.

நீண்டகாலமாக இராஜன் செல்வநாயகத்திற்கு முன்பிருந்தே தமிழரசு கட்சி எம்.பி.யாக இருந்துவந்த செ.இராஜதுரையினால் செய்யப்பட்ட அபிவிருத்திகளை விட 1970 – 1977 வரையான காலப்பகுதிகளில் இராஜன் செல்வநாயகம் பன்மடங்கான வளர்ச்சி திட்டங்களை மட்டக்களப்பில் செய்து முடித்திருந்தமை இன்னும் பலருக்கு ஞாபகமிருக்கலாம்.

அதேவேளை 1970 ம் ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் படுதோல்வி கண்டதனால் பாராளுமன்ற வாய்ப்பைகூட இழந்திருந்தார் அமிர்தலிங்கம். அந்தவகையில் அல்பிரட் துரையப்பா அமிர்தலிங்கத்தினை விஞ்சிய ஒரு மக்கள் தலைவனாக யாழ்பாணத்தில் வளர்ந்துவந்தார்.

துரையப்பாவின் வேலைத்திட்டங்கள் யாழ்ப்பாணத்தின் ஏழைகள், விவசாயிகள், மற்றும் சமூகத்தின் தாழ்நிலை வகுப்பிலிருந்தவர்கள் போன்ற பலதரப்பட்டோரதும் வாழ்க்கைத்தரத்தினை அதிகரித்தது. தமது அரசியல் வாழ்வில் எப்போதும் மேனிலை வர்க்கத்தினருக்கான அரசியலை முன்னெடுத்து வந்த தமிழ் தலைமைகள் இந்த சமூகமாற்றத்தை ஒரு போதும் விரும்பியிருக்கவில்லை.

இந்த கீழ்நிலை வகுப்பினரது வளர்ச்சிநிலையானது அமிர்தலிங்கம் போன்ற தமிழரசுகட்சி பிரமுகர்களும் அவர்களது ஆதரவு தளமான மேட்டு குடியினரும் கொண்டிருந்த சமூக அதிகாரத்தை ஆட்டம் காணச்செய்யும் அல்லது கேள்விக்குள்ளாக்கும் நிலையை நோக்கி நகர்ந்தது. இதுவும் அவர்களுக்கு உவப்பானதொன்றாக இருக்கவில்லை. அடுத்து வரபோகின்ற 1977 ம் ஆண்டு பொதுதேர்தலில் இன்னிலைமைகள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் அச்சமுற்றனர்.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கடுமையான வயோதிப தளர்வினை எதிர்நோக்கியதன் காரணமாக 1970 இன் பின்னர் தமிழரசுக் கட்சிக்குள் அடுத்தகட்டத் தலைமையை நோக்கிய குடும்பிப் சண்டைகள் ஆரம்பமாயிற்று. கிழக்கில் இருந்து இரண்டாம் தலைமையாக வளர்ச்சி பெற்றிருந்த சொல்லின் செல்வர் இராஜதுரை அவர்களுக்கே அந்த வாய்ப்புகள் அதிகம் இருந்தது.

ஆனாலும் அ.அமிர்தலிங்கம் தாம் சார்ந்த குழாம் ஒன்றினை தமிழரசுக் கட்சிக்குள் மறைமுகமாக கட்டிவளர்த்து தலைமைப் பதவியைப் பிடிக்க குள்ளத்தனமாக செயற்பட்டு வந்தார். அதேவேளை கட்சியின் செயற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்துபவராக தன்னை எப்பொழுதும் அடையாளப் படுத்துவதில் கண்ணாயிருந்தார்.

1972 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்களாதேசம் எனும் ஒரு நாட்டின் உருவாக்கம் நிகழ்ந்தது. இதற்கு பாகிஸ்தான் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு புதியதொரு நாட்டை உருவாக்க முன்நின்று உழைத்ததே காரணமாகும். இந்த வங்காளதேஷ் எனும் நாட்டின் உதயத்தை வரவேற்றுப் பேசிய அமிர்தலிஙம் இதேபோன்று இலங்கையிலும் இந்தியா தலையிட்டு ஒரு “யாழ்தேஷ்” மலர உதவவேண்டும் என அன்னை இந்திரா காந்தியை கேட்டுக்கொண்டார்.

அதாவது ஒரு நாடு பிளவுபடும் அளவிற்கு இனமுரண்பாடுகள் இல்லாத சூழலில் எடுத்த எடுப்பில் அவ்வப்போது உணர்ச்சி மேலிட உரத்துப் பேசுவதின் பழக்கதோசமே இந்த கருத்தாகும்;. சே.பொன் அருணாசலம் காலத்தில் இருந்து தேவையான போது இப்படித் தனிநாடு குறித்தும் தமிழ் அரசு குறித்தும் தடாலடியாகப் பேசுவது யாழ்த்தலைமைகளின் வழக்கமாக இருந்தது.

அமிர்தலிங்கம் காலத்துக்கு முன்னர் கூட பாகிஸ்தான் உருவான வேளையில் தமிழ் காங்கிரஸின் தலைவராக இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் அதேபோன்றதொரு தனிநாட்டுப் பிரிவினையை தானும் ஏற்படுத்தப் போகிறேன் என்றும் அதை செய்துமுடிக்கப் போகும் “ஜின்னா” தானே என்றும் பிரச்சாரம் செய்தார்.

ஆனால் அதுவெல்லாம் எப்படிப் போலிப் பேச்சாகவும் உணர்ச்சி வசப்பட்ட வெற்றுவார்த்தைகளாக இருந்ததோ அதே போன்றே அமிர்தலிங்கமும் “யாழ்தேஸ்” கேட்டமையும் அமைந்தது. கிழக்கில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளும் சமூக பொருளாதார தேவைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு இவையனைத்துக்குமான தீர்வு ஒரு தனிநாடே என்ற சிந்தனை இவர்கள் மனதில் உருவாகி இருந்திருந்தால் இப்படி எடுத்த எடுப்பிலேயே தனிநாட்டைக் குறிக்க “யாழ்தேஸ்” எனும் வார்த்தை வெளிவந்திருக்க முடியாது.

ஆகவே அமிர்தலிங்கமும் தனது கடந்தகால ஆசான்களின் பாணியில் யாழ்ப்பாணத்தின் பிரச்சனைக்காக மட்டுமே போராடினார். தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான முடிவு என்பது யாழ்ப்பாணத்தின் படித்த வர்க்கத்தின் பிரச்சனைகளுக்கான முடிவு காண்பதே எனும் எண்ணமே அவர் மனதில் இருந்தது.

மக்களின் வாழ்வியல் தேவைகளை ஓட்டிய வேலைத்திட்டங்களை கொண்டிராத தமிழரசு கட்சியினர் சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் மோதுவதென்பது சற்று சிரமமானதொன்றாக இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். ஆகவேதான் மக்களின் மனங்களை கவரும் மொழியுணர்வுகளே வழமைபோல் தமிழரசு கட்சிக்கு கைகொடுத்தது.

தமிழை வளர்க்கின்றோம், தமிழை ஆராய்ச்சி செய்கின்றோம், தமிழுக்கு தொண்டுசெய்கின்றோம் என்று மொழிசார்ந்த வேலைத்திட்டக்களையே மக்களின் முன்வைத்தனர். இந்த வேலைத்திட்டங்களின் முதுகெலும்பாகதான் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு யாழ்பாணத்தில் நடாத்தப்படுவதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டது.

இந்த நாலாவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1974 ல் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட வாய்ப்பினை அமிர்தலிங்கம் தனது எதிர்கால அரசியலை ஸ்திரப்படுத்தி கொள்ளும் நோக்கில் நன்றாக பயன்படுத்த முனைந்தனர்.

அமைதியாக நடாத்தபட வேண்டிய ஆராய்ச்சி மாநாட்டை ஆர்ப்பாட்டமாக நடத்துவது என்பது அறிவுடமையானதொன்றல்ல. ஆனால் சாதாரணமாக நடத்தப்பட வேண்டிய இம்மாநாட்டை பெரியதொரு விழாவாக்கி நடத்த முயன்றனர்.

தொடரும்...
read more...

செவ்வாய், 29 ஜூன், 2010

இன்றைய ஒரு சில அரசியல்வாதிகளின் மறு முகங்கள் - திருந்துவார்களா? மக்கள் நலனுக்காக?

மக்களுக்காக சேவை செய்ய என்று சொல்லி அரசியலுக்கு வந்து. தங்களை தெரிவு செய்த மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்தி வரும் அரசியல் வாதிகள் அன்றுதொட்டு இன்றுவரை இருந்துதான் வருகின்றனர்

அபிவிருத்தி திட்டங்களுக்காக வருகின்ற பணங்களை சுருட்டுவது. கஸ்ரப்படுகின்ர மக்களுக்கு வருகின்ற உதவிகளை சுருட்டுதல் போன்ற கைங்கரியங்களை சில அரசியல்வாதிகள் செய்யாமல் இல்லை.

மட்டக்களப்பிலே நடந்த சம்பவங்கள்....

மட்டக்களப்பு மாவட்டத்திலே வீதி அபிவிருத்தி துரிதமாக நடைபெற்று வரும் இந்த கால கட்டத்தில் மட்டக்களப்பு நகரித்திலே பல வர்த்தக நிலையங்களும் வீடுகளும் அகற்றப் பட்டன.  ஆனால் மட்டக்களப்பிலே இருக்கின்ற ஒரு அரசியல்வாதியின் வீடு வீதியில் இருக்கின்றது அந்த வீடு மட்டும் அகற்றப்படாமல் வீதி வளைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது.

பல கஸ்ரப்பட்ட மக்களின் வீடுகள், கடைகள் என்பன இடிக்கப்பட்டபோது இந்த அரசியல்வாதியின் வீடு மட்டும் ஏன் இடிக்கப்படவில்லை. எங்களுக்கு ஒரு சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா என்று மக்கள் கேட்கின்றனர்.

அதே போன்றுதான் சில அரசியல்வாதிகள் மதுபானசாலைகளுக்கு அனுமதியினை வழங்கி பல சமுக சீர் கேடுகளுக்கு வழி வகிக்கின்றனர். சமூகம் எப்படிபாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை தான் உழைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இவர்களிடம் காணப்படுகின்றது.

மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கும்போது மதுபானசாலை உரிமையாளர்களிடம் பல இலட்சம் ரூபா பணத்தை வாங்குகின்றனர். இதனால் இந்த மதுபானசாலை உரிமையாளர்களுக்கு அந்த அரசியல்வாதிகளாலேயே சில வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.

மதுபானசாலை உரிமையாளர்கள் மக்கள் அதிகம் வசிக்கின்ற பிரதேசங்களிலே மதுபானசாளையினை அமைக்கின்றனர். இதனால் அப்பிரதேச மக்கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்குவதோடு சமுக சீர்கேடுகளுக்கு ஆளாகின்றனர்.

(28.06.2010) காலை 7.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டிப்பிரதேசத்தில் புதிய மதுபான சாலை ஒன்று அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சித்தாண்டி பொதுமக்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள்.


மேற்படி அமைக்கப்பட்ட மதுபானச்சாலை ஏற்கனவே வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் அமைந்திருந்தது இதனால் பல சமூக சீர்கேடுகள் ஏற்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதனால் பல்கலைக்கழக மாணவர்கள் ஆணைக்ககுழு மற்றும் பல்கலைக்கழக நிருவாகம் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததையிட்டு அவ் மதுபானசாலை உடனடியாக அகற்றப்பட்டது. அக்குறித்த மதுபான சாலை தற்போது சித்தாண்டிப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


மேற்படி அர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சுமார் 1மணி நேரம் மதுபானசாலைக்கு முன்பாக நின்று ஆரவாரம் செய்தார்கள், இவ் இடத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலீஸ் பொறுப்பதிகாரி குறித்த ஆர்ப்பாட்டகாரர்களை உடனடியாக கலைந்து செல்லும்படியும் இன்றிலிருந்து இவ் மதுபானசாலை மூடப்படும் எனவும் அதற்கு தானே பொறுப்பு எனவும் குறித்த பொலீஸ் உயரதிகாரி உறுதியளித்தார். இதனை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றார்கள். இவ் மதுபானச் சாலை தொடர்பில் ஓர் ஆமைச்சருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக அறியமுடிகின்றது என அப்பிரதேச வாசிகள் குறிப்பிடுகின்றனர்.


 அத்தோடு இது போன்ற பல மதுபானச்சாலைகள் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதற்கு குறித்த ஓர் அமைச்சர் துணைபுரிந்து செயற்பட்டு வருவதாக அறியக்கிடைக்கிறது. உதாரணமாக வாகரைப் பிரதேசத்தில் ஒரு மதுபானச்சாலை அமைத்துத் தருவதாக கூறி 30 இலட்சம் ரூபாயை அவ்வமைச்சர் பெற்றிருப்பதாகவும், அவ் மதுபான சாலை வாகரையில் இயங்கி வருவதாகவும் அறியமுடிகின்றது. யுத்தத்தினாலும், சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்களாலும் பல வழிகளிலும் நலிவடைந்து இருக்கும் எமது சமூகத்தினை மீட்சி பெறச் செய்யாமல் இது போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடத்தூண்டுகின்ற இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பிரதேசம் சார்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பது வேதனையே



read more...

திங்கள், 28 ஜூன், 2010

சொல்ல வேண்டியதை சொல்கிறேன்

தமிழர் நம்  வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -23

முக்கிய நிகழ்வுகள்..
1970 -07-13 அன்று தேர்தல் முடிந்த கையோடு பிரதியமைச்சர் சந்திரசிறியின் காருக்குள் குண்டு வைத்து வன்முறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த  குண்டுவெடிப்புத்தான் இனப்போராட்டம் எனும் பெயரில் வடகிழக்கில் தொடங்கி வைக்கப்பட்ட முதலாவது வன்முறையாகும்.

 1971 இல் யாழ்ப்பாண மேயராக இருந்த (சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில்) அல்பேட் துரையப்பாவின் காருக்குள்  குண்டு வைக்கப்பட்டது.

 1972 திருகோணமலையில் நடத்தப்பட்ட மகாநாட்டில் தமிழர் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது.

 1972 இல் நிறைவேற்றப்பட்ட குடியரசு யாப்பை எதிர்த்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமது பதவிதுறப்பு.

 1973 இல் தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பேரவையில் பெயரில் கூட்டணியினர் இலங்கை குடியரசு தின முதலாவது ஆண்டை பகிஸ்கரிக்கக் கோரி வடகிழக்கு எங்கும் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

 1973 இல் வடமாகாணத்துக்கு வந்த அமைச்சர்களை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டும் போராட்டங்களில் கூட்டணியினர் ஈடுபட்டனர்.

 1974 இல் தமிழாராட்சி மாநாட்டில் இனவெறி பித்து தலைக்கேறிய சிவகுமாரன் தலைமையிலான இளைஞர் குழாமினால் திட்டமிடப்பட்டபடியே ௯ உயிர்களை மின்சாரத்துக்கு பலிகொடுத்தனர்.

 1975 இல்  யாழ்மேயர் அல்பிரட் துரையப்பாவை சுட்டுக்  கொன்றனர்.

  1976 இல் தமிழர்விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் எனும் பிரிவினைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ழூ 1977 இல் கருணாநிதி எனும் பொலிசார் மாவட்டபுரத்தில் வைத்து தமிழ் தீவிரவாத இளைஞர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 1977 யூலை 21 இல் பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டது.


மேற்படி எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஊடாக 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்வரை அரச பிரதிநிதிகளையும் அரசபடைகளையும் எதிர்ப்பது தான் தமிழ்மக்களின் கடமை எனும் புதிய மரபொன்றினை தமிழர் விடுதலைக் கூட்டணி தோற்றுவித்தது. அதுமட்டுமன்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த தமிழ் பிரதிநிதிகளை தமிழ்மக்களின் துரோகி என பட்டம் சூட்டிவிடுவது என்பதினையும் வழக்கமாகக் கொண்டனர். இதனு}டாக தமது அரசியல் எதிரிகளை எதிர்கொண்டு வெல்லுவது என்பதைவிட அழித்து வெல்லும் குறுக்கு வழியை நோக்கி தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது கவனத்தைத் திருப்பினர். அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி காட்டுதல், குடியரசுத் தினத்தை பகிஸ்கரித்தல் என்பதெல்லாம் தனி ஈழம் ஒன்றை அமைப்பதற்கான முன்னோடி நிகழ்வுகளாக மக்கள் உணரவைக்கப்பட்டனர்.

ஆனால் தமிழரசுக்கட்சியினர் யு.என்.பி. ஆட்சியில் இருந்த 1965 – 1970 காலப்பகுதியில் தாமும் அந்த அரசில் பங்கெடுத்திருந்தனர். இந்தவேளைகளில் இத்தகைய அரசஎதிர்ப்பு நடவடிக்கைகள் ஒன்றில் கூட ஈடுபடாதிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினம் அனுஸ்டிக்கப்பட்டது ஏன் அதை பகிஸ்கரிக்கக் கோரவில்லை? தாம் அமைச்சர்களாய் இருந்த 5ஆண்டுகளிலும் சிங்களஅரச பொலிசாரின் பாதுகாப்புடன் தானே வலம் வந்தனர்? அந்த 5 ஆண்டுகளிலும் தாங்கள் அமைச்சராக இருக்கலாம் என்றால் சி.சு.கட்சி ஆட்சியின் போது ஏன் அல்பிறட் துரையப்பா மேயராக இருக்க முடியாது? இப்போது மட்டும் ஏன் பிரதி அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி காட்டப்பட வேண்டும் என்கின்ற கேள்விகள் எல்லாம் அப்போது கேட்கப்படவில்லை.

தமிழரசுக் கட்சியினதும் செல்வநாயகம் அமிர்தலிங்கம் போன்றோரதும் மக்களை ஏமாற்றுகின்ற இந்த அரசியல் நாடகங்கள் அவ்வேளை அம்பலப்படவில்லை. இத்தகைய நாடகங்கள் அனைத்தும் தமது தேர்தல் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாத மனநிலையில் பழிவாங்கும் உணர்வுடனும் பதவி மோகத்திலும் பக்குவம் இழந்து வெறிபிடித்து அலைந்த தமிழர் தலைவர்கள் என சொல்லப்பட்ட சுயநலவாதக் கும்பல்களின் அடாவடித்தனங்களாகவே உண்மையில் இருந்தன.

ஆனால் இவற்றின் ஊடாக பரப்பட்ட தமிழ் உணர்வில் கிழக்கிலங்கை மக்களும் ஆட்கொள்ளப்படுவது அவ்வேளையில் தவிர்க்க முடியாமல் போனது. தேவையானபோது அமைச்சு பதவிகளைப் பெற்றுக் கொண்டதற்கு “மக்களின் அபிவிருத்தி குறித்த அக்கறை” என சாக்குப் போக்குச் சொல்லும் திறமை இந்த அப்புக்காத்து அரசியல்வாதிகளுக்கு இருந்தது.

அப்படியானால் ஏன் ஒரு சந்தர்ப்பத்தில் கூட கிழக்கிலங்கையில் தமிழரசுக்கட்சிக்காக உழைத்த தலைவர்களுக்கு அமைச்சுப்பதவி பெறும் அந்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை? 1952ஆம் ஆண்டுத் தேர்தலில் வடமாகாணத்தில் ஒருவரைத் தவிர பெரும்தலைவர்கள் எல்லோரும் படுதோல்வி அடைந்த நிலையில் திருகோணமலையில் தமிழரசுக்கட்சிக்கு பெரு வெற்றியீட்டிக் கொடுத்த இராஜவரோதயம் அவர்களுக்கு என் அந்த வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை? செனட்சபை உறுப்பினர்களான மட்டக்களப்பு கல்விமான் கனகரெட்னம் அவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை? கொழும்புச் சீமான் திருச்செல்வத்திற்கு பெற்றுக் கொடுக்கப்ட்ட உள்ளுராட்சி பதவி 1956ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களின் தனிப்பெரும் தலைவனாக தொடர்ந்து வெற்றியீட்டி வந்த சொல்லின் செல்வர் இராஜதுரைக்கு ஏன் வழங்கப்பட்டிருக்கக் கூடாது? தமிழரசுக்கட்சியின் தலைமை கதிரையைக்கூட அலங்கரித்த பெருந்தலைவரும் தனித்தமிழ் தொகுதியான பட்டிருப்பின் பிரதிநிதியுமான மு.இராசமாணிக்கம் அவர்கள் அமைச்சுப் பதவிக்கு தகுதி அற்றவரா? என்கின்ற கேள்விகள் அன்று இல்லாவிடினும் இன்று கிழக்கிலங்கை மக்களிடையே கிளறப்படத் தொடங்கியுள்ளன.

தமிழ் தமிழ் என்று கிழக்கிலங்கை மக்களை ஏமாற்றிக்கொண்டு அவர்களின் ஆதரவினால் வருகின்ற எல்லாவித அரசியல் இலாபங்களையும் வடக்குக்குள் மட்டுமே சுருட்டிக்கொள்ளும் தமிழரசுக்கட்சியினரின் கபடத்தனங்களை இன்று கிழக்கிலங்கை மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளார்கள்.

அடுத்துவரும் தேர்தலை வெல்ல எந்தத் தலைமையை பிழை என்றும் துரோகம் என்றும் சொல்லி செல்வநாயகம் வெளியேறி புதியகட்சியை ஆரம்பித்தாரோ அதே தமிழ் காங்கிரசுடன் சந்தர்ப்பவாத கூட்டுச் சேர்ந்தனர். 1972இல் திருமலையில் கூடிய தமிழரசுக்கட்சி தமிழ் காங்கிரஸ் இலங்கை தோட்டத்தொழிலாளர் காங்கிரஸ் போன்றவை ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாக மலர்ந்தது. 1970 தேர்தலில் படுதோல்வி கண்ட தமிழரசுக்கட்சியும் ஒருநபர் கட்சியாக குறுகிப்போய் இருந்த தமிழ் காங்கிரசும் தமது எதிர்கால தேர்தல் நலனை ஒட்டியே கைகோர்த்துக் கொண்டனர். ஆனால் இது மறுதலையாகவே புரிந்துகொள்ளப்பட்டது. தமிழ் இளைஞர்களிடையே பெரும் உற்சாகத்தை இது கொடுத்தது. எல்லா அப்புக்காத்துமாரும் ஒன்றாக இருக்கையில் நாம் எதற்கு பயப்பிட வேண்டும் எனும் தோரணையில் தமிழ் இளைஞர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் துணிந்து இறங்கினர். வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. இதன் காரணமாக அரச இயந்திரத்தின் கெடுபிடிகளும் அதிகரித்தது இயல்பே.

இது கடந்தகால அரசியல் வரலாறுகள் சொல்பவை. ஆண்டுகளோடு குறிப்பிட்டிருக்கிறேன். தவறு என்று சொல்பவர்கள் எந்த இடத்தில் தவறிருக்கிறது என்று சுட்டிக் காட்டுங்கள்.
தொடரும்...
read more...

ஞாயிறு, 27 ஜூன், 2010

யார் திருந்த வேண்டும்?

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 22

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் என்றும் ஏன் தொடரிலே தவறான கருத்துக்களை சொல்கிறேன் என்று சொல்பவர்களுக்காக எனது முன்னைய இடுகைகளில் இருந்து சில விளக்கங்களை தருகின்றேன்.

தமிழர் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 01 

இந்த பகுதியிலே என்ன சொல்லப்பட்டிருக்கின்றது....

எனது இந்த தொடரைப் பற்றிய அறிமுகம்

//கடந்த நூற்றாண்டின் இறுதிதசாப்தங்கள் மிக மோசமான முறையில் இனவாதம் கோலோச்சும் நாடாக இலங்கையை அடையாளப்படுத்தி வந்திருக்கின்றன. என்றும் இலங்கை அரசினது பேரினவாத போக்கும் தமிழர்தம் தேசியவாத போக்கும் ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைப்பதில் ஒன்றிலிருந்து ஒன்று சளைத்தவை அல்ல என்பதை நிரூபித்திருக்கின்றன.பெரும்பான்மை சிங்கள அரசு சிறுபான்மைத் தமிழர்களை ஓரவஞ்சகமாக நடத்துகிறது என்பதற்காக உரிமைக்குரல் எழுப்பிய தமிழர்தம் தேசியவாதம் ஆயுதபோராட்டத்தை முன்மொழிந்தது. தமிழ்பேசும் இருவேறு மாகாணங்களாய் இருந்த வடக்கும் கிழக்கும் இணைந்து இந்த ஆயுதபோராட்டத்தை நடாத்தியும் வந்தன.//

இலங்கையில் இனவாதம் இல்லையா? தமிழர்களிடம் தேசியவாதம் இல்லையா? சிங்கள அரசு தமிழர்களை ஓர வஞ்சகமாக நடத்துகின்றது என்பதற்காக இல்லையா ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது? வடக்கும் கிழக்கும் இணைந்து இல்லையா இந்த போராட்டத்தை நடத்தவில்லையா/

//இந்த ஆயுத போராட்டத்தின் களபலிகளின் தொடக்கமாக கருதக்கூடியது 1974.06.05எனும் நாள். இலங்கை அரச படைகளிடம் பிடிபடகூடாது என்பதற்காக உரும்பிராய் பொன்.சிவகுமாரன் எனும் இளைஞன் தானே தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அன்று தொடங்கி வைக்கப்பட்டது.//

இது பொய்யானா கருத்தா? இது உண்மை இல்லையா?

இந்த விடுதலைப் போராட்டத்திலே ஆயிரக் கணக்கான போராளிகளையும், இலட்சக் கணக்கான மக்களையும், உடமைகளையும் இழந்திருக்கின்றோம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது அது பொய்யா?

//இருபத்தியொரு வருடகாலம் களத்தில் நின்றவர் தான் கேர்ணல் கருணா அம்மான் என அழைக்கப்படும் முரளிதரன் ஆகும்.இவர் 2004.03.02 ம் திகதி எடுத்த பாரிய முடிவானது முழுமொத்த போராட்டத்தையே ஒரு உலுப்பு உலுக்கியது

தன்மூச்சையே தமிழீழத்திற்கு அர்ப்பணித்து வாழ்நாள் முழுக்க உழைத்த ஒரு மூத்ததளபதி விசுவாசமான தளபதி அறிவிப்பதென்பது பலருக்கும் அதிர்ச்சியானதொன்று தான்.



அதேநேரம் கிழக்குவாழ் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அது அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியையும்சேர்த்தே கொடுத்திருந்ததென்பதும் நாம் கண்ணால் கண்டதே.ஏன் இப்படி நடந்தது? இது சரியானதா? எப்படி இப்படியொரு வெடிப்புக்கான நியாயங்கள் கவனிக்கப்படாமல் போனது? வெடிப்பின் பின் இதை எப்படி அணுகியிருக்க வேண்டும்? இதன் தொடர்ச்சி எங்கேபோய் முடியும்?//

இவ்வாறு சொள்ளப்பட்டிருப்பதிலே என்ன பொய் இருக்கின்றது. கருணாவின் இந்த முடிவால் பலரும் அதிர்ச்சி அடையவில்லையா? கிழக்கு மக்கள் அதிர்ச்சியோடு, மகிழ்சியையும் கொண்டாடவில்லையா?

கருணா அம்மான் பிரிந்து வந்தபோது மட்டக்களப்பின் ஒவ்வொரு என்ன நடந்தது. மக்கள் புலிகள் இயக்கத்துக்கு எதிராக வீதிகளில் இறங்கவில்லையா? ஆர்ப்பாட்டங்கள் செய்யவில்லையா? 

இந்த விடயங்களைத் தவிர வேறு என்ன பகுதி 01 ல் சொல்லப்பட்டிருக்கின்றது? பகுதி 01 ல் என்ன பொய் இருக்கின்றது?




சொல்லப்பட்ட விடயங்கள் என்ன?.. கிழக்கு மாகாணத்தைப் பற்றியும் கிழக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பு பற்றியும் சொல்லப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தைப் பற்றி குறிப்பிடுகின்ற விடயங்கள்ய்தான் பொய் என்று சொல்லப்படுவதால் பகுதி 02 பற்றி விளக்கம் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் சொல்லப்பட்ட விடயங்கள் அத்தனையும் உண்மை.


கிழக்கு மாகாணத்தை பற்றி சொல்லி இருப்பதோடு, 

யாழ்பாணமென்றொரு ராச்சியம் அக்காலை இருந்திருக்கவில்லை. அப்பிரதேசம் மானிடமில்லா வெறும் மணற்றிடராயிருந்தது.

//“மணற்றி என்பது அதன் பூர்வ   நாமம் பின்னாளில் அது மணற்றிடல் எனவும் வழங்கிற்று” என்று யாழ்ப்பாண சரித்திரத்தை 1915இல் எழுதிய ஆ.முத்துதம்பிபிள்ளை என்பார் குறிப்பிடுகிறார் (பக்-01).



யாருமில்லா வெறும்தரையாய் உப்பு கரித்துகிடந்தமையாற்றான் யாழ்பாடிய பாணனுக்கு அது பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது போலும் இந்த பரிசளித்தவன் தான் மேற்கூறிய எல்லாளன்.இதனை முத்துதம்பிபிள்ளை இப்படிக்கூறுகிறார். ‘யாழில் வல்ல ஒரு பாணனுக்கு பரிசாக கொடுக்கப்பட்டமையின் யாழ்பாணமாயிற்று’ //
 
இது பொய்யா? இங்கே யாழ்ப்பான சரித்திரத்திலே சொல்லப்பட்ட விடயங்களை பக்கத்தை குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கின்றது. இது பொய் என்றால் ஆ.முத்துதம்பிபிள்ளை  அவர்கள் எழுதிய யாழ்ப்பான சரித்திரம் பொய்யானதா?
 
அத்தோடு இந்த பகுதியிலே ஆதாரங்களாக மகாவம்சம் எனும் நூலினையும் மட்டக்களப்பின் வரலாறுகளை சொல்லுகின்ற மட்டக்களப்பு மான்மீகம் கல்வெட்டினையும் நூலினையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆதாரங்கள் கேட்பவர்களுக்கு இவைகள் கண்ணுக்கு தெரியவில்லையா?
 
 
இதிலே முஸ்லிம்களும், முற்குகர்களும் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது.
 
ஆதாரங்களாக அங்கே சொள்ளப்பாடிருப்பவை...
 
மட்டக்களப்பு மான்மீக கல்வெட்டுபாடல்.
 
இன்றைய உலகில் உள்ள மிக தொன்மையான இன்றைய உலகில் உள்ள மிக தொன்மையான இன்றைய உலகில் உள்ள மிக தொன்மையான பூகோள வரை படங்களுள் முக்கியமானதொன்று தொலமி வரைந்த படமாகும். இதில் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளதோடு கி.மு.147 வரையப்பட்ட இப்படத்தில் கல்முனை உள்ள இடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைதீவு, தம்பிலுவில், வீரமுனை போன்ற கண்ணகியம்மன் ஆலயங்களிலும் திருக்கோயில், கொக்கட்டிசோலை எனுமிடங்களிலுள்ள கோயில்களிலும் காணப்படுகின்ற கல்வெட்டுக்கள், பட்டயங்கள்

‘கலியான செப்பு’ எனும் கரவாகு பகுதியில் இருக்கும் கல்வெட்டு பாடல்

கரவாகு வரலாறு எழுதிய எம்.எம்.காசிம்

இன்னும் பல ஆதாரங்கள். சொல்லப்பட்டிருக்கின்றன கிழக்கு மாகாணம் பற்றியே சொல்லப்பட்டிருப்பதனால் அதிகம் ஒவ்வொன்றாக ஆராயவில்லை.


இதிலே காலனித்துவரின் வருகை, முஸ்லிம்கள், போன்ற விடயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அதனையும் ஆராயவில்லை.

இப்பொழுது சொல்லுங்கள் இந்த ௫ பகுதிகளிலும் உண்மை இல்லையா? இங்கே காட்டப்பட்டிருக்கின்ற ஆதாரங்கள் பொய்யா?

தொடரும்.... 



read more...

சனி, 26 ஜூன், 2010

எங்கே நியாயம் இருக்கிறது?

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 21

எனும்  இடுகையிலே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். அங்கே சொல்லப்பட்ட விடயங்கள் பொய் என்று சொல்பவர்களுக்கு இன்னும் சில விளக்கங்களை தருகின்றேன்.

முதலாவது பந்தியிலே என்ன சொல்லி இருக்கின்றேன்.

//யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைப் பகுதியில் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக்காரராக மட்டுமல்ல மலையகத்திலும் பெரும் எஸ்டேட்டுகளின் சொந்ததக்காறராகவும் இருந்தார் இந்த செல்வநாயகம். அதேவேளை 1947 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரன் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளராகவும் இந்த செல்வநாயகமே இருந்தார்.//

இதை பொய் என்று சொல்பவர்களிடம் கேட்கின்றேன். காங்கேசன்துறைப் பகுதியில் இவருக்கு பெருமளவு நிலம் இருக்கவில்லையா? மலையகத்திலும் பெரும் எஸ்டேட்டுகளின் சொந்ததக்காறராக இவர் இருக்கவில்லையா? 1947 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரன் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் செல்வநாயகம் இல்லையா? தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இரண்டாவது பந்தியிலே மலையக மக்களின் ஆதரவாளனாக தன்னைக் காட்டிக்கொண்டு புதிய கட்சியை ஆரம்பித்த செல்வநாயகம் தனது தனிப்பட்ட நலன்களையே கணித்து செயற்பட்டிருக்கின்றார். என்று குறிப்பிட்டிருக்கிறேன். 1957 இல் கொண்டுவரப்பட்ட நெற்காணி சட்டத்தை எதிர்த்தமையையும் சுட்டிக் காட்டி இருக்கிறேன்.

மலையகத்தில் பெரிய பெரிய எஸ்டேட்டுக்களை தன்வசம் வைத்திருந்த இவர் மலையக மக்களுக்கு அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு குரல் கொடுப்பதன் ஊடாக தமது நிலச்சுவாந்தர் அந்தஸ்துகளுக்கு பக்கபலமாக அவர்களைப் பயன்படுத்த நினைத்திருக்கின்றார் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

//இக் கருத்தை இல்லை என்று சொல்லப்போகின்றீர்களா? அப்படியானால் மலையக மக்களின் வாக்குரிமை பாதிக்கப்பட்டபோது தீவிரமாக குரல் கொடுத்த இவர் 1952 தேர்தலில் தான் நிலைகொண்டிருந்த யாழ்ப்பாணத்தவர்கள் எங்கோ இருந்த மலையக மக்களின் பிரச்சனையையிட்டு அக்கறை கொள்ளாமையினால் யாழ்ப்பாணத்தில் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள அடுத்துவந்த தேர்தலில் மலையக மக்களின் பிரச்சனைகளைக் கைவிட்டார். அதுமட்டுமல்ல 26-ஜுலை – 1957 இல் நடைபெற்ற பண்டா – செல்வா பேச்சுவார்தையின்போது அதுவரை மலையகத் தமிழர்களின் குடியுரிமையை கோரிவந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பண்டாரநாயக்காவின் வற்புறுத்தலின் பேரில் அக்கோரிக்கைகளைக் கைவிட்டார். அதன் பின்னரே பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டது.//

மலையாக மக்களுக்காக குரல் கொடுத்து வந்த இவர் உண்மையாக மலையாக மக்களில் அக்கறை கொண்டவராக இருந்தால் 26-ஜுலை – 1957 இல் நடைபெற்ற பண்டா – செல்வா பேச்சுவார்தையின்போது மலையாக மக்களின் குடியுரிமை பற்றி பேசி வந்த அவர் அந்த ஒப்பந்தத்திலே மலையாக தமிழர்களின் குடியுரிமை பிரச்சினையை கை விட்டது ஏன்?.

கீழ்வரும் விடயங்களே பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் குறிப்பிடப்பட்ட முக்கிய சரத்துகள் ஆகும்.

1) பிரதேச சபைகளைக் கொண்ட சுயாட்சிப் பிரதேசங்கள் வரையறுக்கப்படும்.


2)குடியேற்றத்திட்டங்கள் மீதான தமிழ் பகுதிகளின் இறைமை வரையறுக்கப்படும்.


3) பிராந்திய மொழி அந்தஸ்தும் அதற்கான உத்தரவாதங்களும் வரையறுக்கப்படும்.

மலையாக மக்களின் நலனுக்காகவும், மலையாக தமிழர்களின் குடியுரிமைக்காகவும் குரல் கொடுத்து வந்த இவர் பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் பின்னர் மலையாக தமிழர்களை மறந்தது ஏன்? இது சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா?

//இத்தகைய விட்டுக்கொடுப்புகளுடன் கைச்சாத்தான பண்டா-செல்வா ஒப்பந்தம்கூட யு.என்.பி இல் இருந்த சிங்கள இனவாதிகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக நேர்ந்தது. அவர்களுக்கு தலைமை வகித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தெற்கில் இருந்து இனவெறியர்களுடன் சேர்ந்துகொண்டு இவ்வொப்பந்தத்தை கிழித்தெறியக் கோரி கண்டிக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். சிங்கள மக்களிடையே ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக பண்டாரநாயக்கா இவ்வொப்பந்தத்தினை கிழித்தெறிய வேண்டிய நிலைக்கு உள்ளானார். நாட்டு மக்களுக்குhக அவர் ஆற்றிய உரையில் இந்த ஒப்பந்தமானது கிழித்தெறியப் படுவதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாதகமான விளைவுகளுக்கு தாம் பொறுப்பல்ல. என சுயநிலை விளக்கம் கூறினார்.//

இது அத தொடரிலே இறுதிப் பந்தி இந்து உண்மை இல்லையா? தெரியவில்லை என்றால் கடந்தகால அரசியல் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.


எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும் தொடர்கிறது....) எனும் அந்த பகுதியிலே வேறு என்ன சொல்லி இருக்கிறேன். இவற்றிலே எங்கே தவறிருக்கிறது சொல்லுங்கள்?

தொடரும்....

read more...

முட்டாள் தனமாக முடிவெடுக்காதீர்கள்.

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் எனும் என்னுடைய தொடர் பதிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில தெளிவு படுத்தல்களை நான் வழங்கவேண்டி இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரலாறுகளை சொல்லிக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கின்றோம். இதில் எது உண்மை எது பொய் என்று அறியவேண்டும், யாரில் தவறிருக்கின்றது என்று அறிய வேண்டும்.

அறிய வேண்டியதன்  தேவை என்ன என்று நீங்கள் கேட்கலாம் கட்டாய தேவை இருக்கின்றது. யாரோ ஒரு சிலர் தவறு செய்திருக்கலாம் அதற்காக ஒட்டு மொத்தத்தில் எல்லோரையும் குற்றம் சொல்லிவிட முடியாது.

மட்டக்களப்பான் துரோகி என்றும், மட்டகளப்பான் மடையன் என்றும் எல்லோருக்கும் மகுடம் சூட்டிவிட முடியாது. இதில் நான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அனானியாக வந்து நான் மட்டக்களப்பான் என்பதால். தேவையற்ற வார்த்தைகளால் என்னை தாக்குவது எந்த வகையில் நியாயம். மடடக்களப்பானுக்கு தமிழ் பற்று இருக்க முடியாதா?

மட்டக்களப்பான் துரோகி போன்ற மகுடங்களை எதிர்கால சமூகமும் சூடிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். யாரில் தவறிருக்கிறது உண்மையான வரலாறு மக்களுக்கு தெரிய வேண்டும்.

என் எழுத்திலே தவறிருந்தால் ஆதாரங்களோடு சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும்

என்று பதிவிட்டபோது இங்கே http://loshan-loshan.blogspot.com/2010/06/aka.html

//இறுதியாக இலங்கையிலுள்ள அத்தனை தமிழ் பேசுவோராலும் மதிக்கப்படும் தந்தை செல்வாவையும் வம்புக்கு இழுத்துள்ளார்.//

இவ்வாறு குறிப்பிடப்பட்டு கருத்துரைகளிலும் நான் பொய்களை எழுதுகிறேன் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பற்றிய எனது அந்த பகுதியிலே நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்று அந்த பதிவை  http://shanthru.blogspot.com/2010/06/blog-post_21.html  சென்று ஒருதடவை பாருங்கள்.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களை பற்றி அறிமுகம் செய்துவிட்டு.

//1957 இல் நெற்காணிச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது தந்தை செல்வா என் அழைக்கப்பட்ட இந்த மனிதர் எப்படி நடந்துகொண்டார்? சுருக்கமாகச் சொன்னால் இந்தச் சட்டமானது நிலமற்ற ஏழை மக்களின் காணிப்பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினைத் தேடித்தரும் நன்நோக்கத்தினை மட்டுமே கொண்டிருந்தது.//

என்று குறிப்பிட்டிருப்பதோடு நிலமற்ற ஏழை மக்களுக்காக கொண்டுவரப் பட்ட நெற்காணி சட்டத்தை  எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களுடன் சேர்ந்து எதிர்த்தார் என்றும் அவர்கள் எதிர்த்ததுக்கு காரணம் தாங்கள் பேரும் நிலை உடமையாளர்கள். அவர்களின் நிலங்கள் பறிபோகும் என்பதாலே எதிர்த்தார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்த பதிவிலே வேறு எதனை சொல்லி இருக்கிறேன். 1957 ல் நெற் காணி சட்டம் கொண்டு வரப்படவில்லையா?  இவர்கள் இருவரும் இந்த  சட்டத்தை எதிர்க்கவில்லையா?  அவர்கள் எதிர்த்ததன் நோக்கம் என்ன? நான் வம்புக்கா இழுத்திருக்கிறேன் நடந்த சம்பவங்களை சொல்லி இருக்கிறேன்.

இவர்கள் பெறு நிலங்களின் சொந்தக் காரர்கள் இல்லையா? அதற்கான ஆதாரங்களை அடுத்த பதிவிலே  சொல்லி இருக்கின்றேன்.

நான் எழுதுபவை தவறென்றால் சுட்டிக்காட்டுங்கள். வெறுமனே பொய் பொய் என்று மட்டும் சொல்ல வேண்டாம்.  என்னுடைய முந்திய பதிவுகளை ஆதாரங்களோடு அலச இருக்கின்றேன்.

கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுங்கள். நான் ஒருபோதும் மரணத்துக்கு பயந்தவனல்ல.

தொடரும்..
read more...

வலைப்பதிவிலே டிவிட்டர் கஜெட் (gadjet ) மிக இலகுவாகவும் அழகான படங்களுடனும் இணைக்கலாம்.



இன்று டிவிட்டரை (twitter ) பலரும் பயன் படுத்தி வருகின்றோம். அதிலும் வலைப்பதிவர்களில் அதிகமானோர் பயன்படுத்தி வருவதுடன்.  தங்களை பின்தொடர சொல்லி தமது வலைப்பதிவுகளிலே இணைப்பு கொடுத்திருப்பார்கள்.
read more...

வெள்ளி, 25 ஜூன், 2010

யார் அந்த நல்லவர்கள்?

 தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 19

1965 இன் பின்னர் தமது கண்துடைப்புக்காக டட்லி – செல்வா எனும் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டனர். ஆனால் இந்த ஒப்பந்தமானது பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் இருந்து எவ்விதத்திலும் மேம்பட்டதொன்றல்ல.
read more...

வியாழன், 24 ஜூன், 2010

ஏமாற்றுக்காரர்களின் மறு பக்கம் தொடர்கிறது

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 18

இதன் பின்னர் எந்த யு.என்.பி. கட்சி பண்டா – செல்வா ஒப்பந்தத்த கிழிக்க மூலகாரணமாயிற்றோ அதே யு.என்.பி யுடன் 1965 ஆண்டு ஒரு அமைச்சு பதவிக்காக தமிழரசுக்கட்சி கூட்டுச்சேர்ந்தது. இதே யு.என்.பி. இல் 1947 ஆம் ஆண்டில் அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டு ஆட்சியல் பங்கெடுத்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் முடிவினை கடுமையாக ஆட்சேபித்து அவருடன் முரண்பட்டுத்தான் இந்த தமிழரசுக்கட்சிக்கு வழிகாட்டும் எஸ்..ஜே.வி.செல்வநாயகம் வெளியேறியிருந்தார் என்பதும் அதன் பின்னரே தமிழரசுக்கட்சி தோற்றம் பெற்றது என்பதும் குறிப்படத்தக்க விடயங்களாகும்.
read more...

புதன், 23 ஜூன், 2010

பதிவுலக பித்தலாட்டங்கள்

என் பதிவுகளைப் பொறுத்தவரை உண்மைகள் வெளிவரவேண்டும். என்று நினைப்பவன் நான்.  தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் எனும் என்னுடைய தொடர் பதிவு தொடர்பாக என்னை வம்புக்கு இழுத்து வருகின்றனர். நான் பிரதேச வாதம் பற்றி பேசுவதாக குறிப்பிடுகின்றனர்.
read more...

செவ்வாய், 22 ஜூன், 2010

எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும் தொடர்கிறது....

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 17


யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைப் பகுதியில் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக்காரராக மட்டுமல்ல மலையகத்திலும் பெரும் எஸ்டேட்டுகளின் சொந்ததக்காறராகவும் இருந்தார் இந்த செல்வநாயகம். அதேவேளை 1947 ஆம் ஆண்டு ஜுன்  மாதம் முதலாம் திகதி இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரன் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளராகவும் இந்த செல்வநாயகமே இருந்தார்.
read more...

திங்கள், 21 ஜூன், 2010

காதலர்கள் எப்படி தன் காதலிக்கு கடிதம் எழுதலாம்.

காதலர்கள் தங்களுக்குள்ளே கடிதங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கடிதம் எழுதுவார்கள் ஆனால் எனக்கு அனுபவம் இல்லை.

சில பிரபலங்கள் தங்கள் காதலிகளுக்கு அனுப்பிய கடிதங்களை தருகிறேன். காதலர்களே நீங்களும் இப்படி கடிதம் எழுதலாம்.
read more...

எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும்

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 16
எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும்

“தந்தை செல்வா” என்று வடக்கில் மட்டும் அல்ல கிழக்கு மாகாண மக்களாலும் அன்பாகவும் மரியாதை உணர்வுடனும் அழைக்கப்படுபவர் இந்த செல்வநாயகம் ஆவார்.
read more...

ஞாயிறு, 20 ஜூன், 2010

ஏமாற்றப்பட்ட தமிழர்களும் ஏமாற்றும் துரோகிகளும்

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 15

பகுதி 14  பார்க்க கிளிக்கவும்.
இந்த குறுகிய நோக்கிலான மொழி வெறிப்பிரச்சாரமே சின்னத்தனமான சிங்கள எதிர்ப்பாகவும் சிறி எதிர்ப்பாகவும் மாறியது. இதனு}டாக தமிழரசுக் கட்சியினர் வடகிழக்கு எங்கும் பெரும் கலவர சூழ்நிலையொன்றை தோற்றுவித்தனர்.
read more...

சனி, 19 ஜூன், 2010

இன்றைய கல்வி சமுகத்தின் நகைப்புக்கிடமான செயற்பாடுகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் அமைந்திருக்கின்ற மிகப் பிரபல்யமான கிழக்கு பல்கலைக்கழக விடுதியிலே 17.06.2010 அன்று இரவு இரு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு மிகவும் பூதாகரமாக வெடித்துள்ளது.
read more...

வெள்ளி, 18 ஜூன், 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 14

முழு இலங்கையிலும் மொழிப்பிரச்சனையை அடிப்படையாகக் கொண்ட பிரச்சாரங்களே 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் முன்நிலை வகித்தது. இதன்காரணமாக சிங்கள மொழி உணர்வின் அடிப்படையில் அணிதிரட்டப்பட்ட மக்களையும்
read more...

புதன், 16 ஜூன், 2010

தமிழர்களை ஏமாற்றிய துரோகிகள்

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 13

இதுபோன்ற பலவகைகளிலும் பௌத்தம் குறித்தும் சிங்கள மொழி குறித்தும் தீவிரமாக செயற்பட்டுவந்த தேசிய மரபுசார்ந்த பலதரப்பட்டோரின் ஒன்றிணைப்பில் “லங்கா ஜாதிக குருசங்கமய” எனும் மதவாதிகளின் அமைப்பு களத்தில் இறங்கியது.
read more...

செவ்வாய், 15 ஜூன், 2010

பிரபல இந்து ஆலயத்தில் பௌத்தம் சார்ந்த கலை நிகழ்வுகள்.

ஆலயங்களிலே திருவிழாக்கள் நடைபெறுகின்றபோது தமிழர் நம் கலை , கலாசாரங்களை பிரதிபலிக்கின்ற பல களை நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. திருவிழாக் காலங்களிலாவது எமது மறைந்து வருகின்ற கலை, கலாசாரங்கள் புத்துயிர் பெறுகின்றன என்று சந்தோசப் பட்டுக்கொண்டிருக்கும் போது எமது கலை, கலாசாரங்களை பாதிக்கின்ற நிகழ்வுகளும் இடம் பெறாமல்  இல்லை.
read more...

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 12

1956ஆம் ஆண்டு சிங்கள அரசகரும மொழிச்சட்டம்.

1920களில் இருந்து இலங்கையில் உருவான சுயபாஷைகளுக்கான இயக்கம் காலப்போக்கில் ஏற்பட்ட இன, மத, பொருளாதார, கலாச்சார நெருக்கடிகளினாலும், தேர்தல் அரசியலை நோக்கிய தமிழ் – சிங்கள அரசியல்வாதிகளின் குறுகிய நலன்களினாலும் உருமாறி சிங்கள அரசகருமமொழிச்சட்டம் ஆக குறுக்கப்பட்டு இறுதியில் (1956இல்) நிறைவேற்றப்பட்டது.
read more...

திங்கள், 14 ஜூன், 2010

விஜய் இலங்கை தமிழரை வைத்து அரசியல் நடாத்துவாரா?

read more...

ஞாயிறு, 13 ஜூன், 2010

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் சிறப்பான இடத்தினைப் பெறும் கொம்புமுறி விளையாட்டு... .

எனது முன்னைய இடுகை மீண்டும் உங்களுக்காக

தமிழர் நம்  கலை, கலாச்சாரங்கள் மறைந்துவரும் நிலையில். நான் நீண்ட நாட்களாக அறிய ஆவலாக இருந்த விடயம் ஒன்றுக்கு முற்று முழுதான விளக்கம் கிடைத்திருக்கின்றது. அது வேறு ஒன்றுமல்ல. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டு பற்றிய பல்வேறு விடயங்களை நேற்று அறிந்து கொள்ள முடிந்தது.
read more...

சனி, 12 ஜூன், 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 11

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இலங்கையில் அதிகமான நிர்வாக உத்தியோகங்களை இலங்கையருக்கே கொடுத்த பின்னரும்கூட ஆங்கில அறிவுபெற்ற மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களிடம் மட்டுமே அவ்வுத்தியோகங்கள் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலை தொடரக்காரணம் ஆங்கிலமே அரசகரும மொழியாக தொடர்ந்தும் இருந்து வந்தமையாகும்.
read more...

தூக்கம் விற்ற காசுகள்

நண்பர் சசி எனக்கு மின்னஞ்சலில் ஒரு கவிதை அனுப்பி இருந்தார். எனக்கு பிடித்திருந்தது உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.


இந்தக் கவிதை 'ரசிகவ் ஞானியார்' எழுதியது.
read more...

வெள்ளி, 11 ஜூன், 2010

திருந்துவார்களா இந்த ஜென்மங்கள்?

அண்மையில் நான் ஒரு வங்கிக்கு சென்றிருந்தேன். அங்கே என்னுடன் படித்த ஒரு நண்பி வேலை செய்கின்றார்.
read more...

வியாழன், 10 ஜூன், 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 10

தமிழரசுக் கட்சி
தமிழர் நெஞ்சங்களில் அழியாத இடம்பிடித்த பெருந்தலைவர் தந்தை செல்வா 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஏன் தோற்கடிக்கப்பட்டார்?
இக்கட்சியானது ஆங்கிலத்தில் பெடரல் பாட்டி என பதிவு செய்யப்பட்டிருந்தாலும் (அதாவது சமஸ்டிக்கட்சி எனும் அர்த்தத்தில்) வடகிழக்கு பகுதிகளில் இது “தமிழரசுக்கட்சி”யெனும் பிரச்சார நோக்கிலான பெயர்கொண்டே இக்கட்சியினரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

read more...

புதன், 9 ஜூன், 2010

இனி என்ன... கொண்டாட்டம்தான்

read more...

செவ்வாய், 8 ஜூன், 2010

இதெல்லாம் ஒரு பதிவுலக அரசியல்?

இன்று பதிவுலகம் ஒரு போட்டி நிறைந்த ஒன்றாக மாறிவிட்டது.  போட்டி இருப்பது ஆரோக்கியமான விடயமே.  ஆனால் இன்றைய நிலையைப் பார்க்கின்றபோது ஒரு சிலர் பதிவுலகை சீரழித்துக் கொண்டிருப்பது வருத்தப்படவேண்டிய விடயமே.
read more...

ஞாயிறு, 6 ஜூன், 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 9

ஒரு துரோக வரலாற்றின் தொடர்ச்சியில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வகித்த பங்கு.

தமிழீழம் என்கின்ற கிழக்கு மாகாண மக்களுக்கு முன்பின் சம்பந்தமற்ற நச்சுக்கொடியை அவர்கள் மீது ஆழமாகப் பதித்து படரவிட்டவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் என்பவராவர்.

read more...

a